நன்மைக்குரிய எண்ணம்

நன்மைக்குரிய நிய்யத்தின் அடிப்படை இக்லாஸ் ஆகும்.

வணக்கம் புரியும் போது, இந்த வணக்கத்தை அல்லாஹ்வுக்காகவே அன்றி வேறு யாருக்காகவும் எதற்காகவும் செய்யவில்லை. அவனது கூலியையே எதிர்பார்க்கிறேன் என்ற மனத்தூய்மையுடன் கூடிய எண்ணமே இக்லாஸ் ஆகும்.

சத்திய நெறியில் நின்று, மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டும் கலப்பற்றதாக்கி அவனையே வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தை வழங்குமாறுமே கட்டளையிடப்பட்டுள்ளனர். இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

எந்தவொரு வணக்கம் புரியும் போதும் நமது எண்ணம் அல்லாஹ்வுக்காகவே இதைச் செய்கிறேன். அவனது கூலியை எதிர்பார்த்து மட்டுமே செய்கிறேன் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.

இக்லாஸான நிய்யத்திற்கே கூலி

மனத்தூய்மையுடனும் இறைதிருப்தியை எதிர்ப்பார்த்தும் செய்யப்படுகிற அமலைத் தவிர மற்றதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா

நூல்: நஸாயீ 3089

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5012

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed