தொழுகையில் வஜ்ஜஹ்து ஓத நேரம் கொடுக்காவிட்டால்

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர், இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது. அவ்வாறு ஓதுவது குர்ஆன் வசனத்திற்கும்,ஆதாரப்பூர்வமான நபிவழிக்கும் மாற்றமானதாகும்.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 7:204

இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!‘ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

எனவே இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓத ஆரம்பித்து விட்டால் நீங்கள் எது வரை ஓதினீர்களோ அத்துடன் விட்டு விட்டு, இமாமின் கிராஅத்தைத் தான் செவிமடுக்க வேண்டும்.

ஜமாஅத் தொழுகையில், இமாம் ருகூவில் நிற்கும் போது வந்து சேர்ந்தால் கூட அந்த ரக்அத் கிடைத்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஸனாவை பாதியில் நிறுத்துவதால் தொழுகைக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

எனினும் இது போன்ற கட்டங்களில், அல்லாஹும்ம பாயித் பைனீ... போன்ற சிறிய துஆக்களை ஓதினால் முழுமையாக ஓதி முடிக்க முடியும்.

 

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed