தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு 75 தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில் 300 தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது.

நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி யாராவது இட்டுக்கட்டி சொல்லி இருப்பார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால், அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அது போன்ற செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று கருதி அதை விட்டு விட வேண்டும்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவை என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.

மற்றும் சில அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளன. ஆயினும் சில ஹதீஸ்கள் மட்டும் ஏற்கத் தக்கதாக உள்ளன என்று கூறுகின்றனர்.

தஸ்பீஹ் தொழுகை தொடர்பான கீழ்க்காணும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமனவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்து கூறுகின்றனர். அதாவது கீழ்க்காணும் ஹதீஸ்கள் பலவீனமானைவை என்பதை இரு சாராரும் ஒப்புக் கொள்வதால் இது குறித்து ஆய்வு தேவை இல்லை. மேலோட்டமாக அறிந்து கொண்டாலே போதுமானது.

அபூ ராஃபிவு (ரலி) அறிவிக்கும் செய்தி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) யை நோக்கி;என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), "ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், &;என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்! ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15 தடவை கூறுவீராக! பின்னர் ருகூவு செய்து அதில் 10 தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10 தடவை கூறுவீராக. பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் 10 தடவை அதனைக் கூறுவீராக!

பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவை அதனைக் கூறுவீராக! ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள் வீதம் நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உமது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உம்மை மன்னித்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) "அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய யாருக்கும் இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தினமும் உமக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்வீராக! ஒரு வாரத்தில் ஒரு முறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்வீராக!” இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி)

நூல் திர்மிதீ (444)

இந்தச் செய்தி இப்னுமாஜா (1376), பைஹகீ (அஸ்ஸுனுஸ் ஸுக்ரா) தப்ரானீ (அல்முஃஜமுல் கபீர்) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அனைத்து நூற்களிலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெறுகிறார்.

தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிஞர்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் மூஸா பின் உபைதா பலவீனமானவர் என்பதில் ஒத்த கருத்தில் உள்ளனர். எனவே மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன்; உனக்கு நன்மையைத் தருகிறேன்; உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன். (அப்போது) பகல் சாயும் போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை, அல்ஹம்து லில்லாஹ் 10 தடவை, அல்லாஹு அக்பர் 10 தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப் பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்தால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு பகலில் அல்லது இரவில் ஏதாவது ஒரு நேரத்தில் தொழுது கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: அபூதாவூத் (1105)

இந்தச் செய்தி பைஹகீ என்ற நூலிலும் (எண் 4698) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அம்ரு பின் மாலிக் என்பவர் பலவீனமானவர். இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. தஸ்பீஹ் தொழுகையை ஆதரிக்கும் அறிஞர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர்.

ஜஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி

http://www.sltj.lk/thasbeeh-thoplugai-or-aaywu/

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed