*சொர்க்கவாசிகள்*

——————————

*இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு.*

*அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.*

*மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும். அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும். அதில் எந்தக் கேடும் இல்லை. அவர்கள் மதி மயக்கப்படவும் மாட்டார்கள்.*

*அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள் மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்.*

அவர்களில் ஒருவர் மற்றவரை விசாரித்துக் கொள்வார்கள். *எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?*

என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.

*நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா* என்று (இறைவன்) கேட்பான். *அவர் எட்டிப் பார்க்கும்போது அவனை நரகின் மத்தியில் காண்பார்.*

*”அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்”* என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார். *எனது இறைவனின் அருட்கொடை இல்லாதிருந்தால் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்டோரில் நானும் ஆகியிருப்பேன்*.

[அல்குர்ஆன் *37:41-57]*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed