சஹ்ர் நேர பாவமன்னிப்பு

இரவு எவ்வளவு தாமதமாகப் படுத்தாலும்  நாம் சஹ்ர் நேரத்தில் எழுந்தோம். அந்தப் பழக்கத்தை நாம் பாடமாகக் கொள்வோமாக! அந்த நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவதை குர்ஆன் சிறப்பித்துச் சொல்கின்றது.

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

அல்குர்ஆன் 51:17-18

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

அல்குர்ஆன்  3:17

இந்த நேரத்தில் அல்லாஹ் தஆலா தனது அடியார்களிடத்தில் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்கின்றான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்என்று கூறுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 1145

அதனால் இந்த நேரத்தில் நாம் பாவமன்னிப்புத் தேடுவது இறைவனிடத்தில் மன்னிப்பைப் பெற்றுத் தருகின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed