அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 168* ||

அத்தியாயம் 20 – தாஹா (طٰهٰ‌)
61- 90 வசனங்கள் வரை.

1 ) வெற்றி தோல்வியை தீர்மானிக்க போட்டி முடிவான பின்பும், *மக்களை தன்பக்கம் தக்கவைத்து கொள்ள ஃபிர்அவ்ன் அம்மக்களிடம் என்ன பிரச்சாரம்* செய்தான்?

*உங்கள் *நாட்டிலிருந்து உங்களை வெளியேற்றவும், உயர்வான உங்கள் வழிமுறையை ஒழிக்கவும்* விரும்புகிறார்கள். எனவே, உங்கள் சூழ்ச்சியை ஒருங்கிணைத்து, அதன்பின் அணிவகுத்து வாருங்கள்! (20:64)

2 ) *அல்லாஹ்வின் புறத்தில் இருந்து எல்லா உதவியும், தைரியமும் கிடைத்த பின்பும்* மூஸா நபி மனிதர் என்ற அடிப்படையில் *கயிரு, கைத்தடி கண்டு என்ன செய்தார்கள்*?

மூஸா நபி அவர்கள் தம் *மனதில் பயத்தை உணர்ந்தார்*. (20:67)

3) *சூனியக்காரர்கள் இறுதியில் யாரை ஈமான் கொண்டார்கள்*?

*அல்லாஹ்வை(ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை நாங்கள் நம்பினோம்* என்று கூறியவாறு (அல்லாஹ்வுக்கு) ஸஜ்தா செய்தோராக விழுந்தனர். (20:70)

4 ) *ஃபிர்அவ்ன், ஈமான் கொண்ட மந்திரவாதிகளுக்கு என்ன தண்டனை அளிக்கப் போவதாக கூறினான்*?

ஃபிர்அவ்ன், மந்திரவாதிகளின் *மாறு கைகள் மற்றும் மாறு கால்களைத் துண்டித்து, பேரீச்சந் தண்டுகளில் அவர்களைச் சிலுவையில் அறைவதாகக் கூறினான்*. (20: 71)

5 ) *மந்திரவாதிகள் ஏன் ஃபிர்அவ்னின் மிரட்டல்களுக்கு கவலைப்படவில்லை*?

மந்திரவாதிகள், *தங்களைப் படைத்த இறைவனையும், அல்லாஹ்வின் தெளிவான சான்றுகளையும் நம்பியதோடு, அவர்களின் பாவங்களை மன்னித்து நன்மை வழங்குவதையும் நம்பியிருந்ததால், ஃபிர்அவ்னின் மிரட்டல்களுக்கு கவலைப்படவில்லை. (20: 72, 73)

6) அல்லாஹ், இஸ்ராயீல் மக்கள் கடலில் கடந்து செல்லும்போது என்ன செய்தான்?

அல்லாஹ், மூஸாவுக்கு கடலில் *உலர்ந்த ஒரு பாதையை ஏற்படுத்தி, அவரது அடியார்களை இரவில் அழைத்துச் செல்ல உத்தரவிட்டான்*. ஃபிர்அவ்னும் அவனது படைகளும் பின்தொடர்ந்த போது *கடல் அவர்களை மூடிவிட்டது*. (20:77–78)
___________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *