நிறுத்தல் குறிகள்

திருக்குர்ஆனில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும், வசனங்களுக்கு இடையேயும் சில அடையாளங்களையும் சேர்த்து தற்போது அச்சிட்டு வருகின்றனர். இத்தகைய அடையாளங்கள் எதுவும் இன்றளவும் பாதுகாக்கப்படுகின்ற மூலப் பிரதியில் இல்லை.

  • இந்த இடங்களில் நிறுத்துவது அவசியம்
  • இந்த இடங்களில் நிறுத்துவது சிறந்தது
  • இந்த இடங்களில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓதுவது சிறந்தது
  • இந்த இடங்களில் நிறுத்துவதும், நிறுத்தாமலிருப்பதும் சமமானது
  • இந்த இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிறுத்தியுள்ளார்கள்
  • இந்த இடங்களில் ஜிப்ரீல் நிறுத்தியுள்ளார்கள்

என்று சில அடையாளங்கள் மூலம் உணர்த்துகின்றனர். இவை அனைத்தும் எந்தச் சான்றுமில்லாத கட்டுக் கதைகளாகும்.

இப்படி குர்ஆன் நெடுகிலும் சில இடங்களில் ஜீம், சில இடங்களில் ஸே, சில இடங்களில் வாவ், சில இடங்களில் மீம், சில இடங்களில் காஃப், சில இடங்களில் லாம் அலிஃப், சில இடங்களில் ஸாது, சில இடங்களில் ஸாது லாம் ஏ – இப்படி ஏராளமான அடையாளங்களை இடையிடையே நுழைத்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வசனத்தையும் நிறுத்தி ஓதுவார்கள் என்பதற்கு மட்டும் தான் சான்றுகள் உள்ளனவே தவிர, இவர்கள் குறிப்பிட்டுள்ள இந்தக் குறியீடுகளுக்கும், அது தொடர்பாகக் கூறும் சட்டங்களுக்கும் எந்தச் சான்றும் இல்லை. ஒருவர் தமது விருப்பப்படி எந்த இடத்திலும் நிறுத்தி வாசிக்கலாம்.

இது போன்ற அடையாளங்களைத் தவிர்த்திருந்தால் குர்ஆன் இன்னும் அதன் தனித்தன்மையோடு துலங்கியிருக்கும்.

உதாரணமாக, மூன்றாவது அத்தியாயத்தில் 94வது வசனத்தின் ஓரத்தில் ஜிப்ரீல் நிறுத்திய இடம் என்று எழுதியிருக்கிறார்கள். ஜிப்ரீல் இந்த இடத்திலே நிறுத்தினார் என்பதற்கு எந்த நூலிலும் எந்தச் சான்றுமில்லை.

ஒரு சான்றுமில்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியதை ஓரங்களில் எழுதினார்கள். அதுவே பிற்காலத்தில் அச்சு வடிவமும் பெற்றிருக்கிறது என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed