கவனமற்ற தொழுகை

தொழுகை இஸ்லாத்தின் முதன்மையான அமலாகும். நம்மை மறுமை வெற்றிக்கு நெருக்கிக் கொண்டுச் செல்லும் அமலாகும்.

ஆனால், அத்தகைய தொழுகைக்கூட நிய்யத்துடன் கவனமாகத் தொழ வேண்டும்.

தமது தொழுகையில் கவனமற்றுத் தொழுவோருக்குக் கேடு தான். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் தொழுகின்றனர்.

அல்குர்ஆன் 107:4-6

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் அவனோ அவர்களை ஏமாற்றுவான். அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்கு காட்டுவதற்காகவும் நிற்கின்றனர். அவர்கள் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைப்பதில்லை.

அல்குர்ஆன் 4:142

அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததே அவர்கள் செலவிட்டது அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக உள்ளது. மேலும்  அவர்கள் சோம்பேறிகளாகவே தொழுகைக்கு வருகின்றனர்; விருப்பமின்றியே செலவிடுகின்றனர்.

அல்குர்ஆன் 9:54

எண்ணமும் கவனமுமின்றி தொழுதால் அது எவ்வாறு கூடாதோ அதே போல எண்ணத்தைப் பறிக்கும் விதமான சூழல் இருக்கும் போதும் தொழக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக் கூடாதுஎன்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: முஸ்லிம் 969

பசியுடன் இருக்கும் போது உணவு கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்நேரத்தில் தொழச் சென்றால் தொழுகையின் எண்ணத்தை விட உணவு பற்றிய எண்ணமே மேலாடும் என்பதால் இந்தச் சூழலை நபிகளார் தவிர்க்கச் சொன்னார்கள்.

அதே போல சிறுநீர், மலத்தை அடக்கி கொண்டும் தொழக்கூடாது. அந்த இயற்கைத் தேவைகளை முடித்த பிறகே தொழ வேண்டும். ஏனெனில் அடக்கிய நிலையில் தொழுதால் தொழுகையில் கவனம் ஏதும் இருக்காது. எப்போது கழிவறைக்குச் செல்வோம் என்ற எண்ணமே மேலிடும்.

எனவே, இதுபோல எண்ணமற்ற வணக்கங்களையும் கவனத்தைத் திசை திருப்புகிற சூழலையும் தவிர்க்க மார்க்கம் போதனை செய்கிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed