கடனைத் தள்ளுபடி செய்வோம் அர்ஷின் நிழல் பெறுவோம்

வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள மேலதிகச் செல்வத்தை ஏழைகளுக்குக் கடனாகவோ, தர்மமாகவோ வழங்கி உதவுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது. ஆனால் முஸ்லிம்களில் சிலர் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்குவதைக் கூச்சமில்லாமல் செய்து வருகின்றனர்.

அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்யப்படும் தர்மம் தான் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் கடன் கொடுக்கும் விஷயத்தில் அல்லாஹ் இந்த விதியைத் தளர்த்துகிறான். நாம் கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராது என்ற நிலை ஏற்படும்போது அந்தக் கடனைத் தள்ளுபடி செய்தால் அது தர்மமாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என இவ்வசனம் கூறுகிறது.

கடன் கொடுக்கும்போது தர்மம் என்ற எண்ணம் நமக்கு இல்லாவிட்டாலும் கடன்பட்டவர்களுக்கு கருணை காட்டுவதற்காக அல்லாஹ் இந்த விதியைத் தளர்த்தி அருள் புரிகிறான்.

அது போல் ஸகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தமக்கு வர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்து தன்மீது கடமையான ஸகாத் தொகையிலிருந்து அதைக் கழித்துக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து (2:280) அறிந்து கொள்ளலாம்.

(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.

[அல்குர்ஆன் 2:280]

அர்ஷின் நிழல்

உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.

நூல்: முஸ்லிம் (5736)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed