திருக்குர்ஆன் வசனங்களின் கருத்துப்படி, அல்லாஹ் அடியார்களுக்கு வழங்கிய செல்வங்களை அல்லாஹ்வுக்காக செலவும் செய்ய வேண்டும். சிக்கனத்தையும் பேண வேண்டும்.

கையை இருக்கவும் வேண்டாம், விரிக்கவும் வேண்டாம் :

“(நீர் செலவு செய்யாது) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர். மேலும், (அனைத்தையும் செலவு செய்து) அதனை முழுமையாக விரித்து விடவும் வேண்டாம். அவ்வாறாயின், நீர் இழிவுபடுத்தப்பட்டவராகவும், கைசேதப்பட்டவராகவும் ஆகிவிடுவீர்” (அல்குர்ஆன்: 17:29)

கஞ்சத்தனம் செய்தால் மக்களால் தூற்றப்படுவர், சக்திக்கு மீறி அனைத்தையும் செலவு செய்தால், மேற்கொண்டு செலவழிக்க ஏதுமின்றி கைசேதப்பட்டவராய் முடங்கி நிற்க வேண்டும்.

கருமித்தனமாக கையை மூடி வைத்துக் கொள்ளவும் வேண்டாம். ஊதாரித்தனமாக கையை விரித்து அனைத்தையும் செலவு செய்திடவும் வேண்டாம். “செலவும் செய்ய வேண்டும், சிக்கனம் பேணி சேமித்தும் வைக்கவேண்டும்” என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.

நபிமொழி :

“நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர்(ரழி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேகரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed