ஏழாம் நாளில் குழந்தையின் முடியை மழிக்க வேண்டுமா?

குழந்தை பிறந்து ஏழாம் நாள் தலை முடியை மழிக்க வேண்டும். ஆனால் குழந்தை தலை மிருதுவாக இருப்பதால் மழிக்க அச்சமாக உள்ளது. கத்தியால் மழிக்காமல், கத்தரிக் கோலா, அல்லது டிரிம்மர் மெசினால் குழந்தையின் தலை முடியை டிரிம் செய்யலாமா?

குழந்தை பிறந்த ஏழாவது நாளில் குழந்தையின் தலை முடி மழிக்கப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்பட வேண்டும். அதன் முடி மழிக்கப்பட்டு அதற்குப் பெயர் சூட்டப்பட வேண்டும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)

நூல் : அபூதாவூத் 2455

குழந்தையின் தலைமுடியை வெட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. அதை மழிக்க வேண்டும் என்றே கூறியிருக்கிறார்கள். மழிப்பதை விட்டுவிட்டு முடியை நீங்கள் குறைத்தால் இந்த நபிவழியை உங்களால் செயல்படுத்த முடியாது. முடியை மழிப்பது தான் நபி வழியாகும்.

அதே நேரத்தில் குழந்தையின் மண்டை ஓடு மிக மெல்லியதாக இருக்கும் பட்சத்தில் முடியை மழித்தால் அது குழந்தைக்குக் கேடு விளைவிக்கும் என்று இருக்குமேயானால் அதை விட்டுவிடுவது தான் சரியான செயலாகும். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.

திருக்குர்ஆன் 2:195

உங்களை நீங்களே சாகடித்துக் கொள்ளாதீர்கள்.

திருக்குர்ஆன் 4:29

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதை தரக்கூடிய ஒவ்வொன்றையும் விட்டும், கேடு தரக்கூடிய ஒவ்வொன்றையும் விட்டும் தடுத்தார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

நூல்: அபூதாவூத்

மிக மெல்லியதாக உள்ள மண்டை ஓட்டில் உள்ள முடியை மழிப்பதால் குழந்தைக்குக் கேடு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுவார்களேயானால் அவர்களது ஆலோசனைப்படி அதை விட்டு விடுவது தான் சிறந்ததாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed