*இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?*

*இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது* என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்ற்னர்.

இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர்.

அபூ ளிலாலுடைய அறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். சூரியன் உதித்த பிறகு அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு (நன்மை) கிடைக்கும்.*

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதி 535

இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து *அபூ ளிலால் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். யஹ்யா பின் முயீன், நஸாயீ, யஃகூப் பின் சுஃப்யான், இப்னு ஹிப்பான், இப்னு அதீ, அபூதாவூத், ஹாகிம் ஆகியோர் இவரைப் பலவீனமானவர்* என்று விமர்சித்துள்ளனர். எனவே இந்த செய்தி பலவீனம் என்பது உறுதியாகின்றது.

மூசா பின் அலீ என்பவரின் அறிவிப்பு

அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாகவும் இதே செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். சூரியன் உதித்த பிறகு அவர் எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஒரு ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மையுடன் அவர் திரும்புகிறார்.*

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி­)

நூல் : தப்ரானீ 6424

இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக *மூசா பின் அலீ என்பவர் இடம்பெறுகின்றார். இவர் யாரென்ற விபரம் தெரியவில்லை. இவருடைய நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இவர் பலவீனமானவராவார்.*

இவரிடமிருந்து உஸ்மான் பின் அப்திர் ரஹ்மான் என்பவர் அறிவிக்கின்றார். நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாத நபர்களிடமிருந்தும் , பலவீனமானவர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவிக்கக்கூடியவர் என்று இவரை இமாம்கள் குறைகூறியுள்ளனர்.

மேற்கண்ட ஹதீஸை இவர் *மூசா பின் அலீ என்பவரிடமிருந்து அறிவிப்பதால் மூசா பின் அலீ நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாதவர் அல்லது பலவீனமானவர்* என்பது மேலும் உறுதியாகின்றது.

அல் அஹ்வஸ் பின் ஹகீம் என்பாரின் அறிவிப்பு

உத்பா பின் அப்த் (ரலி) அவர்கள் வழியாகவும் இதுபோன்ற செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*ஒருவர் ஃபஜர் தொழுதுவிட்டு சூரியன் உதிக்கும் வரை அமர்ந்திருந்து ளுஹாத் தொழுகையை நிறைவேற்றினால் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் நிகரான நன்மை அவருக்கு உண்டு.*

அறிவிப்பவர் : உத்பா பின் அப்த் (ரலி)

நூல் : முஃஜமுஸ் ஸஹாபா 1321

இதில் *அல்அஹ்வஸ் பின் ஹகீம் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர்* என்று அஹ்மது பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், நஸாயீ, இப்னு ஹஜர், தஹபீ, முஹம்மது பின் அவ்ஃப் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் உறுதியானவர் அல்லர் என்று யஃகூப் பின் சுஃப்யான், ஜவ்ஸஜானி ஆகிய இரு அறிஞர்களும் கூறியுள்ளனர். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமாக இருக்கின்றது.

இதேப் போன்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஒரு அறிவிப்பு இப்னு ஹிப்பான் அவர்கள் தொகுத்த அல்மஜ்ரூஹீன் என்ற நூ­லில் இடம்பெற்றுள்ளது.

முந்தைய செய்தியில் இடம்பெற்ற பலவீனமான அறிவிப்பாளர் அல்அஹ்வஸ் பின் ஹகீம் இதிலும் இடம்பெற்றுள்ளார்.

ஃபள்ல் பின் முவஃப்பக் என்பவரின் அறிவிப்பு

இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக பின்வரும் செய்தி தப்ரானியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜர் தொழுதுவிட்டால் (சூரியன் உதித்த பிறகு) தொழும் வரை தான் அமர்ந்த இடத்தி­ருந்து எழமாட்டார்கள். ஒருவர் ஃபஜர் தொழுதுவிட்டு தன் இருப்பிடத்திலேயே அமர்ந்து பிறகு தொழுதால் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும், உம்ராவாகவும் ஆகிவிடுகின்றது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : தப்ரானி 12334

—————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed