இறுதிவரை தொடரும் ஏகத்துவப்பணி

இறுதித் தூதரான முஹம்மது நபியவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த ஏகத்துவக் கொள்கையை கியாமத் நாள் வரை எடுத்துச் சொல்லும் கடமை அவருடைய சமுதாயத்தவரான நம் ஒவ்வொருவர் மீதும் இருக்கின்றது. இதை நபியவர்களும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம் 3885)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறுதி நாள்வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(முஸ்லிம் 3886)

எனவே நித்திய ஜீவனான இறைவனின் தொண்டர்களாக நாம் இறுதிவரை உறுதியாக இருப்பதற்கும், இந்த கொள்கையை எடுத்துச் சொல்வதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

(அல்குர்ஆன் 3:8)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed