எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறைக்கு சென்றவர்களிலும் உயிர்களை தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அவர்களின் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிடும்போது மிக அதிகமாகவே இருந்தார்கள் என்று பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இல்லஸ்ட்ரேடட் வீக்லி பத்திரிகையில் எழுதி அது 20/12/1975 அன்று வெளிவந்தது.

ஆனால் மறு புறத்தில் முஸ்லிம்கள் செய்த தியாகங்களை குறைத்து மதிப்பிடுகிற ஒரு கூட்டம் அளவற்ற பொய்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களை ஏதோ ஒரு வேண்டாத தலைச்சுமை போல ஆட்சியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் ஒரு சிலர் இந்த நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென்றும் அள்ளிவிட்டுக் கொண்டிருக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவர்களின் இந்த க் கருத்துக்கள், சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவ்விதம் பேசுவோர் மீது ஏவி விடப்பட்டாலும்,அவை யாவுமே கண் துடைக்கும் காரியங்கள்தான். அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாள்கின்ற அவலம் ஒருபுறம் ; சுதந்திரத்துக்காக வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் மறுபுறம்.

கிழக்கிந்திய கம்பெனிக்கு அவர்களின் பிரதிநிதிகளாக இருந்தூ கிஸ்தி வசூ¬லித்து தந்தவர்கள் எல்லாம் , இன்று தியாக வேஷம் போட்டு முஸ்லிம்களின் தியாகத்தின் சூரியனின் கதிர்களை , கரங் கொண்டு மறைத்து விடலாம் என்று நினைக்கலாம், ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.

இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது. எவ்வளவு காவிச்சாயம் அடித்தாலும் இந்த தியாகங்களை மறைக்க முடியாது.
சிறு குறிப்புகளுடன் இந்தப் பட்டியல் நீளும்.

வேலூர் சிப்பாய்க் கலகம்:-

ஒரு சுதந்திரத்துக்கான முதல் போராட்டம என்று வர்நிக்கப்படும் சிப்பாய் புரட்சியைக் கூட முஸ்லிம்கள் தொடர்புடையதால் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்கிறார்கள். இந்தப் பாவிகள் .

1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசினார்கள். இந்த உயிர்த் தியாகங்களைக் கூட மறந்துவிட்டு வரலாற்றுப் பாடங்களில் இரண்டு மார்க் கேள்விக்கு பதிலாகவே இந்த சம்பவம் சித்தரிக்கப் படுகிறது.

மாப்பிள்ளைமார்கள் போராட்டம்:

1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு ஒரு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி, நசுக்கிக் கொல்லப்பட்டார்களே!

இந்த மாப்பிள்ளைமார் மணவறையில் அனுபவிக்காமல் , பிணமாகி அடக்கப் பட்ட மண்ணறைகள் இன்றும் கோவை ரயில் நிலையில் அருகில் அமைதியாக சான்று பகர்கிறதே! இந்த வரலாற்று தியாகத்தை எப்படி மறக்க முடியும்? மறைக்க முடியும்?
காந்திஜியின் பட்டங்கள், பதவிகள்

புறக்கணிப்பு போராட்டம்:-

அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர்.

அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று, இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே !

அரசுபபதவி அதிகாரங்களில் முஸ்லிம்களின் சதவீதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு வலுவான காரணமல்லவா?

முஸ்லிம்களை உசுப்பேத்திவிட்டு விட்டு மற்றவர்களுக்குப் பதவிகளைப் பெற்றுத்தந்த ஒரு அரசியல் அசித்க்கு ஆளானவர்கள்தானே முஸ்லிம்கள்?
இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்குஇந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.
வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.

ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர்.

வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19 பேரில் 10 முஸ்லிம்கள் . இட ஒதுக்கீட்டில் பதிமூன்று சதவீதமே பெற்றிருந்த முஸ்லிம்கள் தியாகம் செய்வதில் – சுதந்திரத்துக்காகப் போராடுவதில் – துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில் 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

  1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)
  2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)
  3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)

4.முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)

  1. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை
    வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)
  2. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)
  3. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
  4. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)
  5. அப்துல் ஹமீது
  6. மௌலானா அப்துல் காதர்
    1973 ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது.

அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி¬ம்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

அவர்களின் விபரம் வருமாறு:

பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரங்கிப் பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்

இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போரில் இவ்வளவு முஸ்லிம்களும் தங்களுடைய தியாகத்தால் இந்திய சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்தார்கள். தங்களின் இரத்தத்தை சிந்தினார்கள். இன்னுயிர் ஈந்தார்கள். கண்ணீர் சிந்தினார்கள். தியாகத் தழும்புகளை ஏற்றார்கள்.

https://youtu.be/UNiqr-xqrGE

https://youtu.be/l5Yg0SHyLUM

https://youtu.be/XTHla15RWLI

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed