அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான்

ஒரு மனிதர் பலதரப்பட்ட நபர்களுக்கு மத்தியில் இருந்தாலும் அல்லது யாருமே இல்லாத இடத்தில் தனிமையில் இருந்தாலும், எந்த இடத்தில் நாம் இருந்தாலும், அந்த இடத்தில் அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற ஆழமான நம்பிக்கையை நாம் நம்முடைய உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.

இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்று ஒருவர் தன்னுடைய உள்ளத்தில் ஆழப் பதிய வைத்து விட்டால் எத்துனை பெரிய வழிகேட்டின் பாதையின்பால் தள்ளி விடுகின்ற அழிவில் சிக்கித் தவித்தாலும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்வார்.

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானிலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 57:4

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed