உயிரினங்களிலும், தாவரங்களிலும் ஜோடிகளை அல்லாஹ் அமைத்திருப்பதாக இவ்வசனங்களில் (13:3, 20:53, 36:36, 43:12, 51:49) கூறப்படுகின்றது.

தாவரங்களிலும் ஆண், பெண் என ஜோடிகள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. பிற்கால விஞ்ஞானிகள் தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் அல்லாஹ் ஜோடிகளைப் படைத்திருப்பதாக 36:36 வசனம் கூறுகிறது.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்திருக்கின்றான்.

மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அதுபோல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்கள் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து “இது முஹம்மது நபியின் சொந்தச் சொல் இல்லை; இறைவனின் வார்த்தை தான்” என்பதை அறிந்து கொள்ளலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed