அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 146* ||
அத்தியாயம் 15 [*ஸுரா அல் ஹிஜ்ர்(ஓர் ஊரின் பெயர்))* வசனம் 21- 40 வரை]
1) மனிதன் மற்றும் ஜின்னின் மூலப்பொருட்கள்…
மனிதன்: *மாற்றப்பட்ட கருப்பு களிமண்ணால்* படைக்கப்பட்டான் (15:26)
ஜின்: *கடும் வெப்பமான நெருப்பால்* படைக்கப்பட்டது (15:27)
2 ) *வானவர்களுக்கும் இப்லீஸுக்கும் இட்ட கட்டளை*
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம்பணிந்து (ஸஜ்தா) வணங்குமாறு கட்டளையிட்டான்.
*வானவர்கள் அனைவரும் கட்டளைக்கு கீழ்ப்படிந்தனர்* (15:30)
3 ) இப்லீஸ் என்கிற ஷைத்தான் *அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாததுக்கு* காரணம் என்ன?
அவனது *அகங்காரமும் பெருமையும்*
*மாற்றப்பட்ட கருப்புக் களிமண்ணால் நீ படைத்த மனிதனுக்கு நான் பணியப் போவதில்லை* என்று கூறி மறுத்தான்
(அல் குர்ஆன் 15:33)
(7: 12) *தன்னை நெருப்பால் படைக்கப்பட்டவன் என்றும், ஆதமை மண்ணால் படைத்ததால் தான் அவரை விட மேலானவன்* என்ற *அகந்தையால் மறுத்தான்*
4 ) இப்லீஸை வழிகேட்டில் விட்டது யார்?
*இப்லீஸை வழிகேட்டில் விட்டது அல்லாஹ் தான்*. இப்லீஸ் தன் இறைவனிடம், “*என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால்*” என்று கூறுகிறான்.
(15:39)
5 ) *எதனை யாருக்கு அழகாக்கி காட்டுவதாக இப்லீஸ் அல்லாஹ்விடம் கூறினான்*?
*பூமியில் உள்ள தீய செயல்களை மனிதர்களுக்கு அழகாக காட்டுவதாக கூறினான்* (15:39-40)
*அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர மற்றவர்களை வழிகெடுப்பதாக கூறினான்*
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*