ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை

  1. சூரியன் உதித்த பின்னர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது. புகாரி:951
  2. இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும். புகாரி:956
  3. அந்த நாளில் பரக்கத்தையும் புனிதத்தையும் எதிர்ப்பார்த்து இறைவனை பெருமை படுத்தும் விதமாக அல்லாஹீ அக்பர் என்ற தக்பீரை அதிகமாக மனத்திற்குள் கூறவேண்டும்,பிரார்த்தனையை அதிகமாக செய்ய வேண்டும். புகாரி:971
  4. பெண்களும் தொழும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். புகாரி:971
  5. மாதவிடாய் பெண்களும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். தொழுகையில் பங்கேற்காமல் இறைவனின் பரக்கத்தை எதிர்பார்த்து தக்பீர் கூறுதல்,பிரார்த்தனை செய்தல் போன்ற மற்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். புகாரி:351,971
  6. பெருநாளுக்கு செல்லும் போது ஒரு வழியிலும் திரும்பும் போது மற்றொரு வழியிலும் செல்ல வேண்டும். புகாரி:986
  7. தொழுகைக்கு பிறகு தான் சாப்பிட வேண்டும். (ஹஜ் பெருநாள்)
    இப்னுகுஸைமா (1426)
  8. இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது.
    புகாரீ (1431)
  9. இரு பெருநாள் தொழுகைக்கும் மற்றத் தொழுகைகளைப் போல் பாங்கும் இகாமத்தும் கிடையாது. அபூதாவூத் (969),
  10. இரண்டு ரக்அத் தொழவேண்டும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்ல வேண்டும் அஹ்மத் (6401)
  11. இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும்போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
    புகாரீ (973)
  12. வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் எப்படி இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்துவாரோ அதைப் போன்று இரு பெருநாள்களிலும் மிம்பரில் உரை நிகழ்த்த கூடாது. தரையில் நின்றுதான் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். புகாரீ (956),
  13. அல்லாஹு அக்பர் என்று கூறுவதுதான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்த தக்பீரையும கற்றுத்தரவில்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed