\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\

*வீட்டை விட்டு வெளியேறும் போது ஒதும் துஆ*

நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது

بِسْمِ اللَّهِ ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ ، لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

*பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்*.

என்ற துஆவை ஓதுவார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இது அபூதாவுதில் இடம்பெறும் செய்தி. இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் *இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருடிப்பு) செய்பவர்* என்று விமர்சிக்கப்பட்டவர்.

அதாவது அடுத்தவரிடம் நான் கேட்டேன் என்பது போன்ற தெளிவான வாசகங்கள் கூறாமல் அவர் வழியாக அறிவிக்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்தியே கூறியுள்ளார்.

வீட்டைவிட்டு வெளியேறும் போது ஓதும் துஆ தொடர்பாக உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழியாக பின்வரும் துஆ அறிவிக்கப்பட்டுள்ளது.

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا

இந்த செய்தி *திர்மிதீயில் (3349) பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமானது*.

எனவே, வீட்டைவிட்டு வெளியேறும்போது பின்வரும் துஆவை ஓதுவதும் நபிவழியே.

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed