—————————————-
யார் இந்த நபித்தோழர்


  1. அல்லாஹ் யாருக்கு நல்லவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான் என்ற நபி மொழியை அறிவித்தவர்.

2 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் நபியவர்கள் தொழுது முடித்த பின் ஓதும் துஆவை இவர்களுக்கு எழுதி அனுப்பினார்கள்.

3 ஒட்டு முடியின் விபரீதத்தைப் பற்றி மதீனா வாழ் மக்களுக்கு அறிவுறுத்தியவர்.

4 உம்மு ஹராம் பின்தி மில்ஹான் (ரலி) அவர்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் கடல் போர் வீராங்கனையாக கலந்து கொண்டார்கள்.

5 இவருடைய தந்தை நபி (ஸல்) அவர்களிடம் தம் மகனை தங்களின் எழுத்தாளராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

6 நபிகளாரின் மனைவி உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் சகோதரர் இவர்.

7 பாங்கு சொல்லக்கூடியவருக்குரிய சிறப்பைப் பற்றி அறிவித்த நபித்தோழர்.

8 நபியவர்களின் செய்திகளை வரையரையின்றி அறிவிப்பதைப் எச்சரித்தவர்கள்.

9 நபிகளார் காலத்தில் ஏழையாக இருந்தவர்

10 உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றபோது இணைவைப்பாளராக இருந்த அவர்களின் மனைவியரில் ஒருவரை தலாக் விட்டார்கள். அவர்களிள் ஒருவரை இவர் திருமணம் முடித்திருந்தார்.

விடை
➖➖➖➖➖➖➖➖
முஆவியா பின் அபூ சுப்யான் (ரலி) அவர்கள்
➖➖➖➖➖➖➖➖
1 ஆதாரம் : புகாரி 71
2 ஆதாரம் : புகாரி 6330
3 ஆதாரம் :புகாரி 3488
4 ஆதாரம் : புகாரி 2788
5 ஆதாரம் : முஸ்லிம் 4914
6 ஆதாரம் : முஸ்லிம் 4914
7 ஆதாரம் : முஸ்லிம் 631
8 ஆதாரம் முஸ்லிம் 1876
9 ஆதாரம் : முஸ்லிம் 2965
10 ஆதாரம் : புகாரி 2731
—————————————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed