கூட்டு குர்பானியில் சமமாக பணம் போட வேண்டுமா?

இல்லை

ஏழு பேர் கூட்டாக ஒரு மாட்டைக் குர்பனி கொடுக்கும் போது சமமாக முதல் இட வேண்டும் என்றோ அவரவர் வசதிக்கேற்ப பங்கெடுக்க வேண்டும் என்றோ நேரடியாக ஹதீஸில் கூறப்படவில்லை. நேரடியாக அவ்வாறு கூறப்படாவிட்டாலும் அதன் பொருள் அனைவரும் சமமாக பங்கெடுக்க வேண்டும் என்பது தான்.

ஏழாயிரம் மதிப்புடைய மாட்டில் ஒருவர் 500 ரூபாய் மட்டும் கொடுத்தால அவர் ஏழில் ஒரு பங்கு கொடுத்த்வராக மாட்டார். பதினான்கில் ஒரு பங்கு கொடுத்தவராகத் தான் ஆவார். ஒவ்வொருவரும் சமமாகக் கொடுத்தால் தான் ஒவ்வொருவரும் ஏழில் ஒரு பங்கு கொடுத்தவராக முடியும்.

அதே சமயம் ஆறு பேர் சேர்ந்து ஒரு மாட்டை வாங்கி அதில் ஒரு பங்கை மனமுவந்து இன்னொருவருக்காக விட்டுக் கொடுத்தால் அப்போது பணம் கொடுக்காதவருக்கும் குர்பானி நன்மை கிடைத்து விடும். ஏனெனில் இவருக்காக மற்றவர்கள் அன்பளிப்புச் செய்ததால இவரே கொடுத்ததாகத் தான் பொருள்.

அது போல் ஏழாயிரம் மதிப்புடைய மாட்டை வாங்கும் போது 500 தந்தால் போதும் இன்னொரு 500 ரூபாயை உங்களுக்காக நாங்கள் போட்டுக் கொள்கிறோம் என்று மற்ற ஆறு பேரும் மனமுவந்து கூறினால் அப்போது அவர் நேரடியாகக் கொடுத்தது 500, அவருக்காக ஆறு பேரும் சேர்ந்து அன்பளிப்பாகக் கொடுத்தது 500 ஆக மொத்தம் அவர் 1000 ரூபாய் கொடுத்தவராகி விடுவார்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed