*”குர்பானி பிராணியை அறுப்பவர்கள் கவனத்திற்கு“*

——————————————————-

1. *பெருநாள் தொழுகைக்கு பிறகு தான் பிராணியை அறுக்க வேண்டும்*.

நூல்: *முஸ்லிம் (3959)*

2. *அறுக்கும் கத்தியை கூர்மையாக வைக்க வேண்டும்.*

நூல்: *முஸ்லிம் (3977)*

3. *பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்* என்று கூறி அறுக்க வேண்டும்.

நூல்: *புகாரி (5558)*

4. நபி (ஸல்) அவர்கள் *ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.*

நூல் : *இப்னுகுஸைமா (1426).*

(இதற்கு நீண்ட நெடிய நேரம் ஆகுமென்றால் உணவு சாப்பிட்டுக் கொள்வது குற்றமில்லை. இது ஒரு பேணுதலாகும்)

5. *பிராணியின் மாமிசத்தை நாமும் உண்டு, உறவுகள் அண்டை வீட்டாருக்கு வழங்க வேண்டும். ஏழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும். தோல், கயிறு போன்றவை தர்மத்திற்கு உரியவை.*

நூல்: *புகாரி (1717) அல்குர்ஆன் (22:36)*

6. *பிராணியை அறுப்பவர்களுக்கு கூலி மட்டும் கொடுக்க வேண்டும். மாமிசம், தோல், கயிறு என எதனையும் அவர்களுக்கு கொடுக்க கூடாது. *

நூல்: *புகாரி (1717)*

7. *பிராணியை அறுத்த பிறகு நமது உடலில் வெட்டாமல் இருந்த நகம், முடிகளை வெட்டிக் கொள்ளலாம்.*

நூல்: *முஸ்லிம் (3998)*

குறிப்பு: பிராணியை அறுக்கும் காட்சிகளை வீடியோ – புகைப்படம் எடுத்தலை தவிர்க்கவும். முகநூல் வாட்சபில் பரப்புதல் போன்ற வீணான காரியங்களை தவிர்க்கவும்.

இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுவோம். இதனை பிறருக்கும் பகிர்ந்து நன்மை பெறுவோம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed