ஃபஃல் என்றால் என்ன?

இஸ்லாத்தில் சகுனம் அனுமதிக்கப்படவில்லை. எனினும் ஃபஃல் என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று சொன்னார்கள். மக்கள், “நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

நூல் புகாரி 5754

ஃபஃல் என்பது நல்லவற்றை சொல்வதற்குரிய வார்த்தையாகும். உதாரணமாக ஒருவரை நோய்நலம் விசாரிக்க செல்லும்போது “அல்லாஹ் நாடினால் குணமாகிவிடும். எந்த சிரமும் இல்லை” என்று ஆறுதலான வார்த்தைகளை கூறுவோம். இது ஃபஃல் என்பதாகும்.

மேலும் திருமணங்களுக்கு செல்லும்போது “அல்லாஹ் நாடினால் இருவரும் நீண்டகாலம் வாழ்வீர்கள்” என்று நல்ல வார்த்தைகளை கூறுவதும் ஃபஃல் என்பதாகும். ஆனால் சிலர் இதை தவறாக விளங்கிக் கொண்டு “பால் கிதாப்” என்ற பெயரில் “வருங்காலத்தை கணித்து கூறுகிறோம்” என்று கூறி, மக்களை ஏமாற்றுகின்றனர். இது ஃபஃல் அல்ல. ஏமாற்று வேலையாகும். மார்க்க அடிப்படையில் ஹராமாகும். இதை அறியாத மக்கள் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed