நம்பிக்கையாளர்களின் நற்பண்பு

முஃமின்களின் பண்புகளைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு வசனங்களில் பேசுகிறான். அவ்வாறு கூறும் போது, நம்பிக்கை கொண்டவர்கள் சக மனிதர்களைத் தீமைகளில் இருந்து தடுப்பார்கள் என்று சேர்த்தே குறிப்பிடுகிறான். ஆகவே, சமூகத்தில் இருக்கும் தீமைகள் சிறிதாயினும் பெரிதாயினும் அவற்றைக் களைந்தெறிந்து நமது நம்பிக்கையை முழுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:71

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

திருக்குர்ஆன் 3:114

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.

திருக்குர்ஆன் 22:41

நல்ல சிந்தனைகளை விதைத்தால் போதும் தீமைகள் தானாகத் தொலைந்துவிடும் என்று சிலர் வாதிடுகின்றனர். தீமையைத் தடுக்க வேண்டும் என்கிற இறைவனின் ஆணைக்கு அணைகட்ட நினைக்கிறார்கள். இவர்களின் கருத்து எல்லா இடங்களிலும் சாத்தியமாகாது. அசுத்தத்தை அகற்றாமல் வெறும் நறுமணத்தைக் கொட்டுவதால் மட்டும் எதிர்பார்க்கும் முழுத் தூய்மை கிடைத்து விடாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளங்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed