நபி முஆத்(ரலி) அவர்களிடம்  இஜ்திஹாத் செய்ய சொன்னார்களா?

நபி முஆதிடம் கூறியது
நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) பதிலளித்தார். அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் சுன்னத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்திலும் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, என்னுடைய சிந்தனையைக் கொண்டு இஜ்திஹாத் (ஆய்வு) செய்வேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வுடைய தூதருடைய தூதருக்கு அருள் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஆத் பின் ஜபல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் திர்மதீ, அபூதாவூத், அஹ்மத், தாரமீ, பைஹகீ உள்ளிட்ட பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிவிப்புகளிலுமே ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றார்கள். மேலும் இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரது பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed