ஜன்னத்துல் பகீஃயில் நபிகள் நாயகம்…

அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள்இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களை படுக்கையில்காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் எனபயந்து போனாயா?

நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம்வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாக இறைவன் ஷஃபான்மாதத்தின் 15 ம் இரவின் போது முதல்வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் அடியார்களைமன்னிக்கிறான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)

நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதி எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னுஅபீஷய்பா எண் : 29858

இவர்கள் எடுத்துரைத்த இந்த செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்றுஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம்திர்மிதீ அவர்கள் இந்த செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இதுஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed