முஹம்மது நபி ஸல் அவர்கள் பற்றி …

▪︎ தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவர்.

▪︎ தனது ஆறு வயதில் தாயை இழந்தவர், முழு அனாதையாக வளர்ந்தவர்.

▪︎ உறவினர்களின் ஆதரவில் வளர்ந்தவர், நற்குணமிக்க சிறுவர்.

▪︎ தீய குணங்களில் இருந்து பாதுகாக்கப்பட்ட இளைஞர்.

▪︎ ஆடுகளை மேய்த்தவர், அமானிதங்களை பாதுகாத்தவர்.

▪︎ சமாதான புருஷர், நல்லிணக்க நாயகர்.

▪︎ நேர்மையான வியாபாரி, வாக்கு நாணயம் மிக்கவர்.

▪︎ தொழிலாளியாக பணிபுரிந்தவர், விதவையை முதலாவதாக திருமணம் செய்தவர்.

▪︎ பிரபஞ்சத்தை சிந்தித்துப் பார்த்தவர்.

▪︎ படைத்தவனை தேடி தியானித்தவர்.

▪︎ படைத்தவனின் அருளைப் பெற்றவர்.

▪︎ இறைத் தூதுத்துவத்தை பெற்றவர்.

▪︎ மனிதர்களைப் பற்றி கவலைப்பட்டவர்.

▪︎ இறைவனுக்கு இணை வைப்பதை வெறுத்தவர்.

▪︎ மக்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தவர்.

▪︎ சிலை வழிபாட்டை வெறுத்தவர், படைத்தவனின் பால் மக்களை அழைத்தவர்.

▪︎ சொர்க்கத்தைக் கொண்டு மக்களுக்கு நற்செய்தி கூறியவர்.

▪︎ நரகத்தை விட்டும் எச்சரித்தவர்.

▪︎ சத்தியப்பாதையில் துணிவு மிக்கவர்.

▪︎ துன்பங்கள் துயரங்களை தாங்கியவர்.

▪︎ கல்லால் அடிவாங்கியவர், வசை பேச்சுகளுக்கு ஆளானவர்.

▪︎ எதையும் தாங்கும் இதயம் உடையவர்.

▪︎ நற்குணத்தின் தாயகமானவர்.

▪︎ சத்தியத்திற்காக நாடு துறந்தவர்.

▪︎ உற்றாரால் புறக்கணிக்கப்பட்டவர், சகிப்புத் தன்மைக்கு பெயர் போனவர்.

▪︎ அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டானவர்.

▪︎ போர்க்களங்களை சந்தித்தவர், இழப்புகளை தாங்கிக் கொண்டவர்.

▪︎ தியாகிகளை உருவாக்கியவர், மாபெரும் புரட்சியாளர்.

▪︎ மாவீரர், மடமையை அகற்றியவர்.

▪︎ அறிவுக் கண்களைத் திறந்தவர்.

▪︎ சிறந்த வழிகாட்டி, படைத்தளபதி.

▪︎ தன்னை படைத்தவனின் அடிமை என பெருமை அடைந்தவர்.

▪︎ இலட்சியத்தை நிறைவேற்றியவர்.

▪︎ சிற்றின்ப வாழ்க்கையை வெறுத்தவர்.

▪︎ பேரின்ப வாழ்க்கைக்காக பாடுபட்டவர்.

▪︎ உயிரைக் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர்.

▪︎ அடிமைத்தனத்தை ஒழித்தவர், நிறவெறியை மாய்த்தவர்.

▪︎ மொழி வெறியை போக்கியவர்.

▪︎ மனிதநேயத்தை நிலைநாட்டியவர்.

▪︎ தன்னை பின்பற்ற அழைத்தவர், தன்னை வரம்பு மீறி புகழ்வதை தடுத்தவர்.

▪︎ தான் ஓர் இறை அடிமை என முழங்கியவர்.

▪︎ எனக்கு சிலையோ சமாதியோ கட்டக் கூடாது என்றவர்.

▪︎ விதவைக்கு வாழ்வு அளித்தவர்.

▪︎ ஆதரவற்றவர்களுக்கு உதவியவர்.

▪︎ இரக்க குணம் கொண்டவர்.

▪︎ மாபெரும் பேரரசை உருவாக்கியவர், உலகம் போற்றும் உத்தமர்.

▪︎ அனைத்து தலைவர்களாளும் பாராட்டப்படக் கூடியவர்.

▪︎ எதிரிகளாலும் மதிக்கப்பட்டவர்.

▪︎ எந்நேரமும் ஒலிக்கப்படும் நாமம் உடையவர்.

▪︎ 200 கோடி மக்களின் இதயங்களில் இடம் பிடித்தவர்.
200 கோடி மக்களால் பின்பற்றப்படக்கூடியவர்.

▪︎ இறையருளைப் பெறுவதையே இலட்சியமாகக் கொண்டவர்.

▪︎ ஒற்றுமையை வலியுறுத்தியவர், மனித சகோதரத்துவத்தை பேணியவர்.

▪︎ மாற்றாரையும் மதித்தவர், ஜீவராசிகள் மீது இரக்கம் கொண்டவர் நியாயத்திற்கு துணை நின்றவர், அநியாயத்தை எதிர்த்தவர்.

▪︎ படைத்தவன் திருப்திக்காக உற்றாரை பகைத்தவர்.

▪︎ ஓர் இறைக்கோட்பாட்டை உரக்கச் சொன்னவர்.

▪︎ புகழுக்குரியவர் என்ற பெயருடையவர்.

இவர்தான் முஹம்மது (அகிலத்தின் அருட்கொடை) புத்தகத்திலிருந்து…

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed