மனிதர்களில் சிறந்தவர்கள்–உண்மையைப் பேசுபவர்கள்

உண்மை என்பது நன்மையின் பக்கம் வழிகாட்டும்; நன்மை என்பது சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதை என்றும் நினைவில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். உண்மைக்கு புறம்பாக பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு வாழ்பவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். உலக வாழ்வின் நலனுக்காக வேண்டி, உண்மையை மறைத்து பொய்யை பேசுபவர்கள், அதைப் பரப்புகிறவர்கள் எங்கும் உள்ளார்கள். இவர்களுக்கு மாற்றமாக, எந்தச் சூழ்நிலையிலும் இக்கட்டான நிலையிலும் உண்மையை உரைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. இதன் இவர்கள் இறைவனிடம் சிறந்த நிலையை அடைவதைப் போன்று நாமும் திகழ, உண்மையை பேசுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் : இப்னு மாஜா-4216 (4206)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed