நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகள்

இம்மை & மறுமை

எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.

(அல்குர்ஆன்:2:201.)

கவலைகள் தீர

எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி.*

(அல்குர்ஆன்:9:129.)

கல்வி அறிவுப் பெருக

இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!

(அல்குர்ஆன்:20:114.)

நிராகரிப்பவர்களுக்கு எதிராக நாம் வெற்றி பெற

என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அறவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.

(அல்குர்ஆன்:21:112.)

மறுமையில் அதிகமான நற்கூலி பெற

அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீம் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).

(அல்குர்ஆன்:37:180,181,182.)

பிரயாண துஆ

இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த (வ் விறை)வன் மிக்க பரிசத்தமானவன்.‘மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள்.

(அல்குர்ஆன்:43:13,14.)

இறை நம்பிக்கை அதிகமாக

அவன் தான் அல்லாஹ்என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.

(அல்குர்ஆன்:42:10.)

நம்பிக்கை கொண்ட அனைவரும் மன்னிக்கப் பெற

என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!

(அல்குர்ஆன்:71:28.)
———————
ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed