சோதனைகளை சகித்துக் கொண்டால்..

செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகள் மூலம் இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றை குறைத்தும் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு  நற்செய்தி கூறுவீராக!  அவர்களுக்கு எந்தத் துன்பம் ஏற்பட்டாலும்  “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.  அவனிடமே திரும்பக்கூடியவர்கள்” என்று கூறுவார்கள்.  இத்தகையோர் மீதுதான் அவர்களது இறைவனின் அருள்களும் மன்னிப்பும் உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.

அல்குர்ஆன் 2:155-157

நபிமார்களும் அவர்களது சமுதாயமும் எதிர்கொண்ட துன்பங்களைப் போல் நாம் அனுபவிக்காமல் எளிதில் சொர்க்கம் சென்று விட முடியுமா? என்றும் அல்லாஹ் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகிறான்.

ஏகத்துவக் கொள்கையை ஏந்தி விட்டோம், ஈமான் கொண்டு விட்டோம் என்றாலும் அல்லாஹ் அத்துடன் திருப்தியடைய மாட்டான். நாம் கொண்டிருக்கும் ஈமானின் ஆழத்தை வெளிக்காட்ட விரும்புகிறான்.

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டுவதற்காக உங்களை நாம் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.

அல்குர்ஆன் 47:31

உங்கள் செல்வங்களிலும் உயிர்களிலும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைப்போரிடமிருந்தும் புண்படுத்தும் சொற்கள் பலவற்றைச் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் அது உறுதிமிக்க காரியங்களில் உள்ளது. 

அல்குர்ஆன் 3:186

அவ்வாறு சோதனைகள் நம்மைத் தாக்குகின்ற போது, அல்லாஹ்வின் பேருதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடிப்பது முஃமினின் இன்றியமையாத கடமையாகும்.

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையை மேற்கொள்வீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்.

அல்குர்ஆன் 10:109

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராகப் பிரார்த்தித்தார்.

அல்குர்ஆன் 68:48

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed