சூனியத்தை உண்மை என்று நம்பலாமா? – ஹதீஸ் ஆய்வு.

மார்க்க அறிஞர்கள் குர்ஆன் ஹதீஸை சரியான முறையில் அனுகாத காரணத்தால் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி விடுகின்றார்கள். இதனால் மக்கள் குழம்பும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு தெளிவு கிடைக்க இவர்களின் குழப்பத்தை தெளிவுபடுத்துவது நம் மீது கடமை. நாம் தெளிவுபடுத்திய பிறகு பெரும்பாலும் அறிஞர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் தெளிவடைந்த வரலாறு இல்லை. ஆனால் மக்கள் தெளிவடைந்து இவர்களின் குழப்பத்திலிருந்து மீண்டு விடுகின்றனர்.

தற்போது சூனியம் விசயத்தில் நமது நிலைபாட்டைச் சிலர் அறைகுறையான ஆய்வோடு விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி அறைகுறையாக செய்யப்பட்ட விமர்சனங்களில் ஒரு விமர்சனத்தைப் பற்றி பார்க்கப் போகின்றோம்.

சூனியம் விசயத்தில் நாம் நமது நிலைபாட்டை நிரூபிப்பதற்கு பலவீனமான ஹதீஸை ஆதாரமாக்க் காட்டுவதாக நம்மீது இலங்கையச் சார்ந்த சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதை நாம் படித்தபோது இந்தக் குற்றச்சாட்டு அவர்களின் அறைகுறை ஆய்வினால் ஏற்பட்ட விளைவு என்பதை தெள்ளத் தெளிவாக அறிய முடிந்தது.

சூனியத்தில் உண்மை இல்லை. அது ஒரு கண்கட்டி வித்தை தான் என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. மேலும் சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஒரு நபிமொழியையும் நாம் கூறியிருந்தோம்.

حدثنا علي بن عبد الله حدثنا المعتمر بن سليمان قال قرأت على الفضيل بن ميسرة عن حديث أبي حريز أن أبا بردة حدثه عن حديث أبي موسى أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة مدمن خمر وقاطع رحم ومصدق بالسحر ومن مات مدمنا للخمر سقاه الله عز وجل من نهر الغوطة قيل وما نهر الغوطة قال نهر يجري من فروج المومسات يؤذي أهل النار ريح فروجهم

நிரந்தரமாக மது அருந்துபவன், உறவுகளைப் பேணாதவன், சூனியத்தை உண்மை என்று நம்பியவன் ஆகிய மூவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்: அஹ்மத் 18748

அபூ மூசா (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் இந்த செய்தி பலவீனமான செய்தி. இதில் அபூ ஹரீஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று குறைகூறியுள்ளனர். இப்படிப்பட்ட பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டலாமா? என்று நம்மிடம் கேட்கின்றனர்.

மேலும் இந்தச் செய்தி அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டு அஹ்மதில் பதிவாகியுள்ளது.

حدثنا معاوية بن عمرو حدثنا أبو إسحاق عن الأعمش عن سعد الطائي عن عطية بن سعد عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة صاحب خمس مدمن خمر ولا مؤمن بسحر ولا قاطع رحم ولا كاهن ولا منان

இந்த அறிவிப்பில் வரும் அதிய்யா பின் சஅத் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்பதால் இதுவும் ஆதாராமாகாது என்று வாதிடுகின்றனர்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பு.

இவர்கள் கூறுவது போல் இந்தச் செய்தி இவ்விரண்டு வழிகளில் மாத்திரம் அறிவிக்கப்பட்டு வேறு ஆதாரப்பூர்வமான வழியில் வரவில்லை என்றால் இது பலவீனமான செய்தி என்று முடிவெடுக்கலாம். ஆனால் உண்மை நிலை அவ்வாறு இல்லை.

அபூ சயீத் (ரலி) அபூ மூசா (ரலி) ஆகிய இருவர் வழியாக மட்டுமே இந்தச் செய்தி வந்துள்ளதாக இவர்கள் கருதியது தான் இந்தத் தவறான முடிவுக்குக் காரணம்.

அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாகவும் இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு அஹ்மதில் பதிவாகியுள்ளது. இது ஆதாரப்பூர்வமானதாகும். இதை இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

مسند أحمد – (ج 45 / ص 477)

26212 – حدثنا أبو جعفر السويدي قال حدثنا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمعت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும். இதில் இடம்பெறும் நபர்கள் அனைவரும் நம்பகமானவர்கள்.

இதில் சுலைமான் பின் உத்பா திமஸ்கீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரைக் குறித்து சில அறிஞர்கள் குறைகூறி விமர்சனம் செய்துள்ளனர். எனவே இவரைப் பற்றி சற்று விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed